எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்ர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெய்ல் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் தமிழக அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளையும், நில உரிமையாளர்களையும் அழைத்து கருத்து கேட்டனர். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விவ சாயிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்தனர்.
நேற்று 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்ர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில்துறை முதன்மை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், திருப்ர் கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அமர்ந்து ஒவ்வொரு விவசாயிகளிடமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
முதல்அமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்பட உள்ளது. விவசாயிகளும், நில உரிமையாளர்களும் எந்தவித தயக்கமும் இன்றி சுருக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கூறலாம். உங்களுக்கு எவ்வளவு சென்ட் இடம் உள்ளது. அதில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள். இதனால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக கூறுங்கள் என்றார்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:
வேலுச்சாமி (அவினாசி தாலுகா, அய்யன் தோட்டம்): எனக்கு 1 ஏக்கர், 1 சென்ட் இடம் உள்ளது. கடந்த பிப்ரவரி 13-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்தனர். உங்கள் விளை நிலம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம். 67 அடி இடத்தை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் சேதம் அடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர். எனக்கு விவசாயத்தை தவிர வேறு வேலை தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது. மாற்றுப் பாதையில் குழாய்களை பதிக்க சொல்லுங்கள் என்று தேம்பி தேம்பி அழுதார்.
பின்னர் சகஜநிலைக்கு வந்து வேலுச்சாமி கூறும்போது, தொழில் இல்லாத போது எங்களால் வாழமுடியாது. எனவே என்னை வாழ வழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன் என்றார்.
தலைமைச் செயலாளர் : கெய்ல் நிறுவனத்தினர் உங்களுக்கு ஏதாவது அத்தாட்சி தந்தார்களா?
விவசாயிகள் பதில்: எதுவும் தரவில்லை. தேசிய நெடுஞ்சாலை அல்லது ஆற்றுப்படுகை வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க சொல்லுங்கள். விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் எல்லா விவசாயிகளும் என்னைப் போன்ற முடிவுக்குதான் வருவார்கள்.
விவசாயி வெங்கடசாலம் (பல்லாராயன்பாளையம்): எங்கள் விவசாய நிலத்துக்கு 150 போலீசாருடன் அதிகாரிகள் வந்தார்கள். எனக்கு தென்னை மரங்கள் உள்ளன. இந்த இடம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம் என்று கூறினார்கள். அந்த குழாய் 2 அடி விட்டம் தான் உள்ளது. இதை பதிக்க 5 அடி அகலத்திற்கு இடம் போதுமானது. ஆனால் 67 அடிக்கு இடம் கேட்கிறார்கள்.
தலைமை செயலாளர்: உங்கள் நிலத்தில் ஓரமாக குழாய் செல்கிறதா? அல்லது நடுவில் செல்ல உள்ளதா?
விவசாயி: நிலத்தின் நடுவில்தான் குழாய் பதிப்பதாக கூறுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் வந்ததால் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. இன்று மதியம் கிருஷ்ணகிரி, மாவட்ட விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது. கடைசி நாளான நாளை தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.
விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி, உணவு, தங்கும் இடம் ஆகியவையும் அரசு சார்பில் வழங்க விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.