முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியானதால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.30 - குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி, கண்காணிக்கப் பட்டதாக கூறப்படும் இளம் பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில்  வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில்  முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர், அமித்ஷா இவர், போலீஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சரும் அதிகாரியும் பேசிய தொலை பேசி உரையாடல்களும் வெளியானது. இதை அந்த பெண்ணின் தந்தை மறுத்தார். இந்நிலையில், போலீஸ் அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமித் ஷாவை மட்டுமின்றி 2005-ம் ஆண்டு முதல் மோடியுடனும் அந்த பெண்ணுக்கு அறிமுகம் உள்ளதாக  புலனாய்வு இணைதளம் "குலைல்" அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின் போது முதல்வர் மோடியை சர்ச்சைக்குரிய அந்த பெண் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் அந்த இணையதளத்தில் வெளியாகியுள்ளன. பெண்ணின் பெயர் மாதுரி என்று குறிப்பிடப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதீப் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மலைத்தோட்ட திட்ட விவகாரம் தொடர்பாக ,அப்போது நான் கலெக்டராக இருந்த போது மோடியை அந்த பெண் சந்திக்க  ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணுடன் மோடி இமெயில் தகவல்களை தொடந்து பரிமாறி வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை போலீஸார் கண்காணித்தது தொடர்பாக தற்போது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த வாரம் பிரதீப் சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்துள்ளார். சர்ச்சைகளுக்கு மத்தியில் மோடியை பெண் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் குஜராத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்