முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் பேனல் வழக்கு: காங்., எம்.எல்.ஏ. மீது செக்ஸ் புகார்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      அரசியல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், மார்ச் .5 - சோலார்பேனல்  மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது சரிதா நாயர் செக்ஸ் புகார்  கூறியு ள்ளார்.

கேரளத்தில் நடந்த  சோலார் பேனல் மோசடி வழக்கில், தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன், அவரது 2-வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்ப்டடுள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு சரிதா நாயர் விடுதலை ஆனார். கொச்சியில் அவரது வீட்டில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளத்தில் பெண்கள் சுயமாக தொழில் செய்ய முடியாது. அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு அளிக்கப்படுகிறது. சோலார் பேனல் தொழிலில் நான் ஈடுபட்டபோது, எனக்கு கண்ணூர் தொகுதி  எம்.எல்.ஏ. அப்துல் குட்டி பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார். அவரது தொகுதியில் சோலார் பேனல் அமைக்க பேச வருமாறு அழைத்தார். அவரைப் பார்க்கச் சென்ற போது என்னிடம் சில்மிஷம் செய்தார். 

எனது செல்போன்  எண்ணை வாங்கி வைத்து அடிக்கடி ஆபாமான குறுந் தகவல்களை  அனுப்பினார். ஒருமுறை திருவனந்தபுரம் ஓட்டலுக்கு வருமாறு அழைத்தார்.  உல்லாசமாக  இருக்கலாம் என்றும் கூறினார். அதை நான் நிராக ரித்ததால் எனக்கு அவர் பல்வேறு வழிகளில் இடையூறு செய்தார்.  இறுதியில் இந்த வழக்கு தொடர்பாக கைதானபோது, என்னை காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என டெலிபோனில்  மிரட்டினார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏக்களை போல் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும் தொல்லை கொடுத்தனர் என்றார்.

                   

      

 

 

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்