முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஏப்.3 - பங்குனி உத்திர திருவிழாலை முன்னி்ட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகர விளக்கு, மண்டல பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தற்போது பங்குனி உத்திரத்தை யொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி அளவில் சபரிமலை அய்யப்பன் கோவில்  தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். 

இதைத் தொடர்ந்து சுவாமி அய்யப்ப னுக்கு  தீபாராதனை காட்டப்படும். வரும் 4-ம் தேதி  காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில் சபரிமலையில் கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சபரிலை அய்யப்பன் கோவிலில் கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். படி பூஜை, உதயாஸ்மன பூஜைகளும் நடைபெறும். 18-ம் தேதி இரவு  சபரிமலை அய்யப்பன் கோவில்  நடை அடைக்கப்படும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்