முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாவலர்களுடன் சென்று மீரட்டில் நக்மா பிரச்சாரம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

மீரட், ஏப்.8 - மீரட் தொகுதியில் பாதுகாவலர்களுடன் சென்று நடிகை நக்மா பிரச்சாரம் செய்தார். உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மீரட் தொகுதியில் நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இவர் தொண்டர்களுடன் சென்று பிரச்சாரம் செய்தார். இவர் நடிகை என்பதால் இவர் சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. நக்மா பேசும்போது, அவர் காட்டும் பாவனையும், சிரிப்பும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அதிக அளவு ஈர்க்கப்பட்டனர். அவர்கள் நக்மாவிடம் சில்மிஷம் செய்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ சிஸ்ராஜ் சர்ம நக்மா கன்னத்தில் முத்தமிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அடுத்த சில நாள்களில் தொண்டர் ஒருவர் நக்மாவிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.  இதனால் பிரச்சாரத்தை அவர் பாதியிலேயே முடித்து வி்ட்டு கோபத்துடன்  சென்றார்.

 இதையடுத்து நக்மாவுக்கு பாதுகாவலர்களை ஏர்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சி தோரிக்கை விடுத்தது. பின்னர் பாதுகாவலர்கள்  புடைசூழ வந்து  அவர் வாக்கு கேட்டார். இந்த முறை பிர்சசாரம் செய்யும் இடத்தை முடிவு செய்து அந்த இடத்துக்கு காரில் சென்று இறங்குகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் கூறியபடி பெண் வாக்காளர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று அங்கு நிற்கும் பெண்களிடம் சிரித்துப் பேசி காங்கிரஸ்  கட்சிக்கு வாக்கு கேட்கிறார். குழந்தைளையும் அவர் அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார். இது குடும்பப் பெண்களை பெரிதும் கவர்கிறது. இது வித்தியாசமாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அஹ்குள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்