முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் லாரி-பஸ் மோதலில் தீ பிடித்ததில் 36 பேர் பலி

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

மெக்சிகன்சிட்டி, ஏப்.15 - மெக்சிகோவில் தபஸ்கோ மாகாணத்தில் வில்லா கெர்மோசா என்ற இடத்தில் இருந்து ஒரு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான வர்த்தகர்கள் இருந்தனர். அந்த பஸ் வெராகுரூஸ் என்ற இடத்தில் சென்ற போது ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்தது. 

பின்னர் தீ மளமள என பஸ் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 36 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் தப்பினர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலியான அனைவரும் வர்த்தகர்கள் ஆவார். 

அவர்களது குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனாநியட்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்