முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்சாஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் பலிக்கல் படுதோல்வி

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டெக்சாஸ், ஏப்.15 - டெக்சாஸ்சில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் ஸ்குவாஷ் வீரர் இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவினார்.

முன்னதாக நடைபெற்ற  டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சர்வதேச தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் தீபிகா பலிக்கல் 11-7 11-13, 13-11, 10-12, 11-4 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள அயர்லாந்தின் மேட்லின் பெர்ரியைத் தோற்கடித்தார். இதன்மூலம் தனது ஸ்குவாஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியின் இறுதிச்சுற்றை உறுதி செய்துள்ளார் பலிக்கல். 

இதுவரை பெர்ரியுடன் 4 போட்டிகளில் மோதியுள்ள தீபிகா பலிக்கல், 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஒட்டுமொத்தத்தில் அவருக்கு இது 12-வது இறுதிச்சுற்றாகும். 

தீபிகா பலிக்கல் தனது இறுதிச்சுற்றில் எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை சந்தித்தார். 

இறுதியாட்டத்திலும் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று கூறிய பல்லிகல் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் தொடரில் எகிப்து வீராங்கணை நூர் எல் ஷெர்பினியை எதிர்கொண்டார்.  ஆட்டம் விருவிருப்பாக நடந்து கொண்டிருந்தது. கடைசி நேரத்தில் நூர் எல் செர்பினியின் ஆட்டத்தை தாக்குபிடிக்காமல் தீபிகா பல்லீகல் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்