முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியுடன் மோடி சந்திப்பு: விஜயகாந்த் அதிருப்தி

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.15 - பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார்.

இதுபற்றி ரஜினி பிறகு நிருபர்களிடம் கூறுகையில், 'மோடி வலுவான தலைவர். அவர் நினைப்பது வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்றார். இது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினி கொடுத்த 'வாய்ஸ' ஆக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மோடி _ரஜினி சந்திப்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. மோடி சென்னை வருவது பற்றியோ ரஜினியை சந்தித்து பேச இருப்பது பற்றியோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஒருவர்கூட எந்த தகவலும் சொல்லாததே விஜயகாந்த் அதிருப்திக்கு முக்கிய காரமணாக கூறப்படுகிறது.

மோடி சென்னை வர இருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வெளியானது. அந்த சமயத்தில் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

மோடியும், ரஜினியும் சந்தித்து பேச உள்ளனர் என்ற தகவல் தெரிந்ததும் நம்மிடம் இதை ஏன் மறைக்கிறார்கள் என்று விஜயகாந்த் கூறியதாக தெரிகிறது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அவர் தன் பிரசாரத்தை முழுமையாக ரத்து செய்தார்.

அதோடு மோடியின் சென்னை பொதுக்கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். மேலும் மோடியை வரவேற்க அவர் தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் யாரையும் விமான நிலையத்துக்கு அனுப்பவில்லை.

மோடி _ ரஜினி சந்திப்பு விவகாரம் விஜயகாந்திடம் மட்டுமின்றி அவரது கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:_

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. முக்கியம் அங்கம் வகிக்கிறது. கூட்டணி கட்சிகளில் எங்கள் தலைவர் கேப்டன் மட்டுமே தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஒரு நடிகர் பின்னால் ஓடுகிறார்கள். இத்தனைக்கும் அவர் பா.ஜ.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்