எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.16 - காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் பல துரோகங்களை கருணாநிதி இழைத்துள்ளார். இது குறித்து அவர் சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு விவாதிக்க தயாரா? என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார். ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட `வடதண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்திலும், வேலூரில் , `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_
காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் பல துரோகங்களை செய்து இருக்கிறார்
கருணாநிதி. கர்நாடகம் அணைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தது, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டப்பட்ட உடன், காவேரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். கருணாநிதியின் துரோகங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். என் கட்சியின் சார்பில் நான் தான் பேசுவேன். இதே போல்
கருணாநிதியும் வந்து சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாரா?
தி.மு.க_வின் சார்பில் துரைமுருகனோ அல்லது வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனைத் கருணாநிதி ஏற்றுக்கொள்ளத் தயாரா? சட்டமன்றத்திற்கு வரத் தயாரா? என்னை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கத் தயாரா? இதனை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா? என்பது குறித்த அவருடைய முடிவை அவர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மை தான் என்று கருணாநிதியே ஒப்புக்கொள்கிறார் என்று தான் அர்த்தம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காதவர் கருணாநிதி. எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பைகாரா புனல் மின் திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் தடை போட்டவர் கருணாநிதி. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர் கருணாநிதி. காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் கருணாநிதி.
இப்படி தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே இழைத்த கருணாநிதி, அண்மையில் திருவா%ரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காவேரி பிரச்சனை குறித்து வாதம் செய்ய சட்டமன்றத்திலே நேரம் ஒதுக்கலாம். ஒதுக்கி, அதிலே விவாதித்து யார் தவறு செய்தார்கள்? யார் நியாயமாக நடந்து கொண்டார்கள்? யார் நம்முடைய உரிமைகளைப் பெற்றுத் தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் என்று கூறி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ் நாட்டிற்கு எதையாவது செய்ததா? இல்லை. 'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்கள் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்ததும் உங்கள் நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட திமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். இப்படிப்பட்ட கட்சிக்கு, திமுக_விற்கு இந்தத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்; கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப் பெறும் போது;
இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்;
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும்;
காவேரி முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்;
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்;
இலங்கை போரின் போது இனப் படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி; தண்டனை பெற்றுத் தருவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழியவும்;
வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய ராணுவத்தை, தரைப்படையை, கப்பற் படையை, விமானப் படையை நவீனமயம் ஆக்கவும்;
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்கவும்;
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்;
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்கவும்;
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவும், இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை <டு கட்டவும்;
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையாக இருக்கவும்;
தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வெள்ளையர்கள் விரட்டப்பட வேண்டும் என்ற மனநிலை மக்கள் மனங்களில் நிலவியது. தற்போது இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக் கூடாது என்ற மன நிலையில் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். இந்தியா முழுவதும் இதே நிலை தான் நிலவுகிறது. இந்திய விடுதலைக்கு முன் மக்கள் மனதில் இருந்த அதே மன நிலை இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது மக்கள் மனங்களில் மீண்டும் உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.