முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்களை மறைத்தார் மன்மோகன்: அத்வானி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      ஊழல்
Image Unavailable

 

பாங்கா, ஏப் 16 - ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்களை கூட்டணி தர்மத்துக்காக பிரதமர் மன்மோகன்சிங் மறைத்து விட்டார் என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். 

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டங்களில் கலந்து கொண்ட அத்வானி பேசியதாவது, 

ஊழல்கள் நடைபெறுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அனுமதித்திருக்க கூடாது. அதற்கு துணை போன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையின் மோசடிக்கு மன்மோகன்சிங் துணைபோனது  அவரது பலவீனத்தை காட்டுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, ஊழல்கள், முறைகேடுகள் ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு  வராது. 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளுக்கு பாஜக எப்போதும் மரியாதை அளித்து வருகிறது. ஆனால் நிதீஷ்குமார் பாஜகவை ஏமாற்றியது மட்டுமின்றி குற்றம் சாட்டியும் வருகிறார் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்