முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 20 மணி நேர துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் பலி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஏப் 16 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் 20 மணி நேரம் போலீசார் நடத்திய துப்பாக்கி சண்டையில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் உயிரிழந்தனர். 

புச்போரா நகரில் உள்ள அகமது நகரில் ஒரு வீட்டில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தோம். அவர்கள் சரணடைய மறுத்து விட்டதையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம். ஆனால் இரவாகி விட்டதாலும் வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததாலும் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 

அந்த வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் வீடு தீப்பற்றியது. வீட்டின் உள்ளே இருந்த தீவிரவாதிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து 20 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. தீவிரவாதிகள் நடத்திய எதிர் தாக்குதலில் போலீசார் 2 பேர் காயமடைந்தனர். அங்கிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்