முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் முஸ்லிம் தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஏப்.16 - உ.பி.யில் முஸ்லிம்  தலைவர்களை  ராஜ்நாத்சிங் சந்தித்து வாக்கு கேட்டார். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் உ.பி.யில் உள்ள லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.   லக்னோவில் உள்ள முஸ்லிம் தலைவர்களை அவர் சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதுபற்றி ராஜ்நாத்சிங் கூறியதாவது:

இந்தியா பல்வேறு மத்தினர் மற்றும் சாதிகளை கொண்டது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பதன் மூலம்தான் இந்தியா வலிமை அடைய முடியும்.  இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. எனவே மத தலைவர்களை சந்தித்து எனது  மரியாதையையும். எனது கருத்தையும் தெரிவித்தேன் எந்று அவரது டிவி்ட்டரில் தெரிவி்த்துள்ளார். முஸ்லிம் தலைவர்களை சந்தித்த படங்களை டுவிட்டரில் அவர் வெளியி்ட்டுள்ளார்.  உ.பி.யில் முஸ்லிம் வாக்காளர்கள்  அதிகம் உள்ளனர். அவர்களதகு ஆதரவைப் பெற எல்லா கட்சிகளும் முயற்சி்த்து வருகின்றன.

ஆனால் பாஜகவும் வேண்டாம், காங்கிரஸ் கட்சியும்  வேண்டாம் என்று சில முஸ்லிம் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இந்த நி்லையில் முஸ்லிம் தலைவர்களை  ராஜ்நாத்சிங் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்