முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லிப்பட்டினம் கலவரம்: 30 பேர் அதிரடி கைது

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சேதுபாவாசத்திரம், ஏப்.16 - மல்லிப்பட்டினத்தில் பிரசராம் செய்ய சென்ற தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகாநந்தத்தை தடுத்து கல் வீசித் தாக்கியதால் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக 30 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர் மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே தெருவுக்குள் சென்று பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம்செய்து அனுப்பி வைத்தனர்.

அப்போது திடீரென பாஜகவினர் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதையடுத்து மோதல் ஏற்பட்டது. 4 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முருகாநந்தம் உள்பட 20 பேர் காயமடைந்தனர். உடனடியக போலீஸார் வேட்பாளரை பாதுகாப்பாக  அழைத்து சென்றனர். இதுபற்றி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில்  புகார் செய்தார். இதுவரை 21 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

இதற்கிடையே 2 கொட்டகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. பாஜகவை சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மல்லிப்பட்டினத்தில் பதட்டம் நீடிப்பதால் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்