முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் மீது பா.ஜ.க. பிரமுகர் பரபரப்பு புகார் மனு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


நெல்லை,ஏப்.17 - நெல்லை நீதிமன்றத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது பா.ஜ.க. வக்கீல் கொடுத்துள்ள புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் அருள்ராஜ். பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். இவர் நெல்லை முதலாவது ஜுடிசியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், சேகர்பாபு தேரோட்டி போலவும், இந்து கொடிக்களுக்கு பதிலாக தி.மு.க. கொடிகளை பயன்படுத்தியும் கடந்த 3.3.2013 அன்று நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
இது இந்துமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் பகவத்கீதையை களங்கப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதால் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட மு.க.ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாளையங்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட காவல் துறைக்கு வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்