முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி தோற்றால் பிரதமராக முடியாது: கெஜ்ரிவால்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


வாரணாசி, ஏப் 17 - வாரணாசி மக்களவை தொகுதியில் நரேந்திர மோடியை மக்கள் தோற்கடித்தால் அவரை பிரதமர் பதவியில் யாரும் அமர்த்த மாட்டார்கள் என்று ஆம்ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
வாரணாசியில் தனது குடும்பத்தாருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், வாக்காளர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை வாரணாசி மக்கள் தோற்கடித்தால் அவரை யாரும் பிரதமர் பதவியில் அமர்த்த மாட்டார்கள். பாஜகவின் கதையும் அத்தோடு முடிந்து விடும்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தியை ஆம்ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பார். அதே போன்ற கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் மோடியையும் தோற்கடிக்க வேண்டும். அப்படி செய்தால் வாரணாசியில் இருந்து புனிதமான அரசியலுக்கு புத்துயிர் பிறக்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்