எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஏப் 17 - அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி இரு தொகுதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வரலாறுகாணாத வகையில் முதன் முதலாக ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி ஆக மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக முதல் முறையாக தனித்தே போட்டியிடுகிறது. கருணாநிதி தலைமையிலான திமுக 35இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் மீதியுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன. தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இந்த தேர்தலை களம் காண்கின்றன.
கூட்டணியை உருவாக்கிய பாஜக தனக்கு 8 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி கொண்டது. அதிலும் ஒரு தொகுதியை வேலூருக்கு விட்டு கொடுத்தது. நீலகிரி பாஜக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து பாஜக தற்போது 6 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. ஆனால் தேமுதிக 14 இடங்களில் போட்டியிடுகிறது.
இப்படியொரு கூட்டணியை இவர்கள் அமைத்தாலும் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவரவர் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த தேர்தலில் இடதுசாரிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. எல்லா தேர்தலிலும் திராவிட கட்சிகளின் தோள் மீதே ஏறி சவாரி செய்து பழக்கப்பட்டு போன காங்கிரஸ் கட்சியும் இந்த முறை தனித்து விடப்பட்டுள்ளது. இக்கட்சி 39 தொகுதிகளிலும் தனித்தே களம் காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 3ம் தேதி தனது பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். பிறகு ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நெல்லை, நாமக்கல், ராசிபுரம், ஆரணி, வேலூர் போன்ற தொகுதிகளில் மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். தனது பிரச்சாரங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் முதல்வர்.
ஆரம்பத்தில் பாரதீய ஜனதாவை அவர் விமர்சிக்கவில்லை. சில தினங்களுக்கு முன் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதீய ஜனதாவையும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பிடிபிடித்தார். காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்த காங்கிரஸ், பாஜக மற்றும் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது என்று வாக்காளர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் ஆரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஒரு சவாலும் விடுத்தார். அதாவது, காவிரி பிரச்சினையில் செய்த துரோகங்கள் பற்றி பட்டியலிட்டு பேச தயார். திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றத்துக்கு வந்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வர் ஜெயலலிதா பகிரங்க சவால் விடுத்தார். ஆனால் இந்த சவாலுக்கு கருணாநிதி இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு முதல்வர் ஜெயலலிதா இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக் குமார் போட்டியிடுகிறார். தருமபுரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மோகன் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று அத்தொகுதிகளில் நடக்கும் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அனேகமாக இந்த கூட்டங்களில் அவர் பாமகவையும் ஒரு பிடிபிடிக்க கூடும். காரணம், தருமபுரி தொகுதியில்தான் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். எனவே முதல்வரின் இன்றைய பேச்சு காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் வருகையையொட்டி இரு தொகுதிகளுமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றன. அதிமுக கொடிகள், பதாகைகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் என இரு தொகுதிகளுமே களைகட்டி காணப்படுகின்றன. முதல்வரை காண அதிமுகவினரும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.