முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அலை வலுவானது: முன்னாள் மத்திய அமைச்சர்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


சிம்லா, ஏப்.17 - 1977-ம் ஆண்டுஅவசர நிலைக்கு எதிராக வீசிய ஜனதா அலையைவிட மோடி அலை வலுவானது என்று சிம்லாவில்  முன்னாள் மத்திய அமைச்சர்  சாந்தகுமார் கூறினார்.         
நாடு முழுவதும் மோடி அலை வீசுவதால் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மோடி  அலை இல்லை என்றும், பாஜக அலை வீசுவதாக முரளிமனோகரர் ஜோஷி கூறினார். இதற்கு ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி ஆகியோர் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து தனது கருத்தை ஜோஷி வாபஸ் பெற்றார். இந்த நிலையில்  1977-ம் ஆண்டுஅவசர நிலைக்கு எதிராக வீசிய ஜனதா அலையைவிட மோடி அலை வலுவான அலை வீசுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தகுமார் தெரிவி்த்தார்.
பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது மோடியையும், பாஜகவையும் பிரிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர்  சாந்தகுமார் கூறினார்.           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்