முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலை படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 18 - தீரன் சின்னமலை 258_வது பிறந்த நாளை யொட்டி அவரது படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 258_வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிலைக்கு கீழே அவரது திரு உருவப் படமும் வைக்கப்பட்டு இருந்தது. முதல்_ அமைச்சர் ஜெயலலிதா பகல் 12.15 மணி அளவில் அங்கு வந்து தீரன் சின்னமலை சிலையை வணங்கி அங்கிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்_அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்ததும் அங்கிருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவி வாழ்க என கோஷமிட்டனர். அவர்களைப் பார்த்து ஜெயலலிதா கை அசைத்து வணக்கம் தெரிவித்தார்.
அவைத்தலைவர் மது சூதனன், அமைச்சர்கள் வளர்மதி, அப்துல் ரகீம், சின்னையா, மேயர்சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செந்தமிழன், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன்எம்.எல்.ஏ, பாலகங்கா, விருகை ரவி, அசோக் எம்.எல்.ஏ, டெல்லி பிரதிநிதி ஜக்கையன், சுகாதார நிலைக்குழு தலைவர் வக்கீல் பழனி, கவுன்சிலர் சின்னையன், ஆர்.சி.ஆறுமுகம், வீடியோ சரவணன், பகுதி செயலாளர்கள் ஏழுமலை, மலைராஜன், ஜெயச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்