முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்னா இஸ்மாயில் பெயரில் மிரட்டல் கடிதம்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


திருவண்ணாமலை, ஏப் 18 - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கோயிலுக்கு கடந்த 15ம் தேதி வந்த ஒரு கடிதத்தில் நரேந்திர மோடி பிரதமரானால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில்களை வெடிவைத்து தகர்ப்போம். இப்படிக்கு பன்னா இஸ்மாயில், தமுக, திருவண்ணாமலை என்று எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இதை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள் இது குறித்து உடனடியாக கோயில் இணை ஆணையரும், இந்துசமய அறநிலைய துறையின் கூடுதல் ஆணையருமான திருமகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மிரட்டல் கடிதம் குறித்து திருவண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இணை ஆணையர் புகார் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் உள்ள ஏதோ ஒரு தபால் பெட்டியில் போடப்பட்டு கோயிலுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிரட்டல் கடிதத்தையடுத்து அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் செல்லும் அனைத்து பக்தர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்