முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு மலர்களால் அலங்காரம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஏப் 19 - ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெறும். 

இந்த ஆண்டும் வெகு விமர்சையாக திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. 

விழா தொடங்கிய 5ம் தேதி முதல் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருவிழாவின் 13ம் நாளில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு 8 வகையான மலர்களை கொண்டு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்