முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் முதல்வர் ஒரே நாளில் 7 இடத்தில் பிரசாரம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் 22_ந் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும்; ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலி லும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்கிறார். 

கடந்த மார்ச் மாதம் 3_ம் தேதி காஞ்சியில் தமது சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா புதுவை உள்பட 37 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தற்போது எஞ்சியுள்ள தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை மற்றும் ஆலந்தூர் சட்டசபை ஆகிய தொகுதிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

முதல்_அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் நேற்று முதல் 3 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் பிரசாரம்  செய்தார்.

அவர் நேற்று  மாலை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பிரசாரம் செய்யவந்தார். அவரை அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், டி.கே.எம்.சின்னையா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன், ஆலந்தூர் வேட்பாளர் வெங்கட்ராமன் ஆகியோர் பூச்செண்டு அளித்து வரவேற்றனர். சுமார் 4.30 மணிக்கு அவர் வந்ததும், வாழ்த்துக் கோஷயங்கள் எழும்பின. திறந்த வேனில் இருந்தபடி அவர் வாக்கு சேகரித்தார். அங்கு ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கட்ராமனுக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர் 4_வது பிரதான சாலை வழியாக செல்லும் அவர் பழவந்தாங்கலில் உள்ள ஆலந்தூர் தாலுக்கா அலுவலகம் அருகேயும்; தொடர்ந்து தில்லை கங்கா நகர் வழியாக சென்று ஆலந்தூர் நீதிமன்றம் அருகிலும்  முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் சென்ற வழியெங்கும் பல இடங்களில்  முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எண்ணிறைந்த மக்கள் அவரை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் பேசியதாவது:_

2011_ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலின் போது எனது வேண்டுகோளினை ஏற்று  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியிலிருந்து போட்டியிட்ட பண்ருட்டிஎஸ்.ராமச்சந்திரனை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். 

பண்ருட்டி ராமச்சந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக தற்போது இங்கே இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்புச் சகோதரர் வி.என்.பி.வெங்கட்ராமன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.  இவர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்.  கடந்த 2ஙூ ஆண்டு காலம் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் பகுதி மண்டலக் குழுத்  தலைவராக பதவி வகித்து; பல்வேறு  நற்பணிகளை ஆற்றியுள்ளார்.   இவரைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  இவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் நேரில் சந்தித்து கேட்டுக் கொள்ளவே, வாக்கு சேகரிக்கவே இன்று நான் இங்கே வந்திருக்கிறேன். என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

ஆலந்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்த பின்னர் கிண்டி, அசாக்பில்லர், எம்.எம்.டி.ஏ. காலனி மெயின் ரோடு வழியாக சென்று மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ரசாக்கார்டன் சந்திப்பில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

மாலை 6 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, பாலகங்கா எம்.பி., மேயர் சைதை துரைசாமி, வேட்பாளர் விஜயகுமார் உட்பட பலர் முதல்வர் ஜெலயலிதாவுக்கு பூச்செண்டு அளித்து வரவேற்றனர். பல இடங்களில் செண்டை மேளம், பேண்டு வாத்தியங்கள் உட்பட முழங்கி முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றனர். ஏராளமான பெண்கள் அவரை பார்த்து தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, நியூ ஆவடி சாலை, அயனாவரம் சாலை, கெல்லீஸ் பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலம், சூளை நெடுஞ்சாலை வழியாக செல்லும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா சூளை தபால் நிலையம் அருகிலும் பேசினார்.

அதன் பின்னர் சைடன் ஆம்ஸ் சாலை, யானைகவுனி பாலம் வழியாக சென்ற அவர் வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் பேசினார்.

தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்டிரல், அண்ணாசாலை, வாலா ஜாசாலை வழியாக செல்லும் அவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் வாக்கு சேகரித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னை தொகுதியிலும், 21_ந் தேதி தென்சென்னை தொகுதியிலும் முதல்_ அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago