முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.பி. ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.20 - திமுக _ அதிமுகவுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா உள்பட மூன்று பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார்குடியில் உள்ள வடுவூர் பகுதியில் பிரசாரத்தின்போது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு தொடர்பாக டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு டி.ஆர்.பி.ராஜா உள்பட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். வரும் 24_ஆம் தேதி வரை திருச்சியில் தங்கியிருந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்