எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 23 - தமிழகத்தில் உச்சகட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையமும் ஒரு உச்ச கட்ட நடவடிக்கையை எடுத்து அரசியல் கட்சிகளை மிரள வைத்துள்ளது. அது தான் 144 தடையுத்தரவு.
அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா நேற்று முன்தினமே தனது பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் நேற்று மாலை தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவுஅமலுக்கு வந்தது.இது 24_ந்தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு நீடிக்கும்என்று தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:_
தமிழ்நாட்டில் நாளை (24_ந்தேதி) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்.
அவை 1.பாஸ்போர்ட், 2.டிரைவிங் லைசென்ஸ், 3.பொதுத்துறை_மத்திய, மாநில அரசுகள் பணியாளர்களின் அடையாள அட்டை, 4.வங்கி புத்தகம் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் (அனைத்தும் போட்டோவுடன் இருக்க வேண்டும்). 5.பான்கார்டு, 6.ஆதார் அடையாள அட்டை, 7.தேசிய மக்கள் கணக்கெடுப்பு அட்டை, 8.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, 9.தொழிலாளர் துறை வழங்கிய அட்டை, 10.பென்சன் அட்டை, 11.போட்டோவுடன் கூடிய தேர்தல் கமிஷன் வழங்கிய பூத்_சிலிப்.
இந்த 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டு போடலாம்.
கடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை காட்டி ஓட்டுபோட அனுமதித்தோம். இந்த தேர்தலில் 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். ஆனால் ரேசன் கார்டை காட்டி ஓட்டுபோட இயலாது.
அரசியல் கட்சிகள் தரும் பூத்_சிலிப்பை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு வரலாம். அதில் கட்சி சின்னம் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் தரும் பூத்_சிலிப்பை வைத்து ஓட்டுச்சீட்டு நம்பரை சரிபார்க்கலாம். ஆனால் அதை வைத்து உரிமை கோர முடியாது.
ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் மது போதையில் யார் சுற்றினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. என்றாலும் சிலர் ஓட்டுப்பதிவு தினத்தன்று போதையில் நடமாடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக இன்று (நேற்று)மாலை 6 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இது 24_ந்தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதுபற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எனவே இன்று (நேற்று) மாலை முதல் 24_ந்தேதி காலை 6 மணி வரை 5 பேர் அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் சேர்ந்து செல்லக்கூடாது. 4 பேர் செல்லலாம்.
இன்று (நேற்று)மாலை 6 மணியுடன் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கி இருந்தால் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்களில் கும்பலாக தங்கி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பணப்பட்டுவாடா பற்றி நிறைய புகார்கள் வருகிறது. இதைத் தடுக்க ஏற்கனவே 2 ஆயிரம் குழுக்கள் உள்ளது. தற்போது மேலும் 5 ஆயிரம் குழுக்கள் அமைத்து பணப் பட்டுவாடா நடக்கிறதா என்று கண்காணிக்கிறோம். நேற்று நடந்த சோதனையில் திருவண்ணாமலையில் ரூ.94 லட்சம், நாமக்கல்லில் ரூ.1 லட்சமும் பூத்_சிலிப்புடன் பிடிபட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை நிலை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 2.93 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் தேர்தல் பணியில் <ஈடுபடுத்தப்படுவார்கள். இன்றே அவர்கள் மின்னணு எந்திரங்களுடன் ஓட்டுச் சாவடிக்கு சென்று விடுவார்கள்.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணபட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இதுவரை கணக்கில் வராத ரூ.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். ஓட்டுப்பதிவு நாளன்று பகல் நேர சினிமா காட்சிகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வந்தது. ஆனால் சினிமா காட்சிகளை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை.
வாக்காளர்கள் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை வாக்கு அளிக்கலாம். மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு கடைசி நேரத்தில் டோக்கன் கொடுக்கப்படும். அவர்கள் வரிசையில் நின்று எவ்வளவு நேரம் ஆனாலும் வாக்கு அளித்து விட்டு செல்லலாம். 6 மணிக்கு பிறகு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.