எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப்.23 - தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுமாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை (24-ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அதன்படி தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 6-வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆலந்தூர் சட்டசபை தொகுயிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தில் இந்த முறை வரலாறு காணாதா வகையில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இத்தேர்தலில் 40 தொகுதிகளிலுமே தனித்து போட்டியிடுகிறது. தனது அரசின் சாதனைகளை நம்பியும் மக்கள் ஆதரவையும் நம்பியும் முதல்வர் ஜெயலலிதா இந்த முடிவு எடுத்து தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளார். தி.மு.க. 35 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் மீதியுள்ள தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடுகிறார். ஆனால் தி.மு.க. வேட்பாளர்களுக்கு இந்த முறை கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியே தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த தேர்தலில் 6 கட்சிகளை இணைத்து பாரதிய ஜனதா ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. அதில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அடங்கும். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. மொத்தம் 18 தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த முறை காங்கிரசுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. 10 ஆண்டுகள் கூட்டணியாக இருந்த தி.மு.க.வே காங்கிரசை கழற்றிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் தோல்வி பயத்தால் பல தலைவர்கள் போட்டியிடவே இல்லை. இப்படியாக 5 முனை போட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்துவிட்டார். தனது பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக அவர் மத்திய சென்னை, வட சென்னை, தென்சென்னை தொகுதிகளில் பிரசாரம செய்தார். தனது பிரசார கூட்டத்தில் எல்லாம் அவர் தி.மு.க.வின் ஸ்பெக்டரம் ஊழலையும் தி.மு.க. செய்த துரோகங்களையும் மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு பேசினார். இந்த இரண்டு கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்ட அவர் செய்வீர்களா?செய்வீர்களா என்று மக்களை பார்த்து எல்லாம் கூட்டங்களிலும் கேள்வி எழுப்பினார். அவரது இந்த புதிய பாணி மக்களை மிகவும் கவர்ந்தது. தென் சென்னை கூட்டத்திலும் இரண்டு கட்சிகளையும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பிடி பிடித்தார். மேலும் 41 வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அவரது பிரசாரம் முடிவுக்கு வந்தது.
இதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரும் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்கள். காங்கிரசை பொருத்தமட்டில் மத்திய மந்திர ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்கள் தங்களால் முடிந்த வரை பிரசாரம் செய்தனர். மேலும் சோனியாவும் ராகுலும் தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக ராமகிருஷ்ணனும் த.பாண்டியனும் சில கூட்டங்களில் பேசினார்கள். அ.தி.மு.க. வுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் இம்முறை களத்தில் இறங்கி பிரசாரம் செய்தனர். ஆனால் தி.மு.க.வுக்கு குஷ்பு மட்டும் பிரசாரம் செய்தார். இப்படியாக கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நடந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுமாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள். நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்புக்காக தமிழக போலீசார் மட்டுமின்றி துணைராணுவ படையினரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகிறார்கள். ஒரு சில இடங்களில் போலீஸ் அணிவகுப்பும் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளை நேற்று செவ்வாய்கிழமை முதல் வாக்குப்பதிவு தினமா நாளை மாலை வரை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.