முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக பிரமுகரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.23 - குஜராத் மாநிலத்தில் வாகன சொதனையின் போது ரூ.50 லட்சத்தை பாஜக பிரமுகரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறியதாவது: அகமதாபாத் எல்லையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சொதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த 4 சக்கர வாகனத்தில் ரூ.1 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் வங்கியிலிருந்து ரூ.50 லட்சம் எடுக்கப்பட்டதற்கான ரசீதை வாகனத்தை ஓட்டி வந்தவர் காண்பித்தார். மீதமுள்ள ரூ.50 லட்சத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவர் பாஜக பிரமுகர் என்பது தெரியவந்தது என்று தேர்தல் அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்