முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இ.கி.மு பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப்.23 - தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் தலைவர் எம்.எல்.சுந்தனம் தலைமையில் தேர்தல் பணிக்குழுவினர் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் தேர்தல் பணிக்குழுவினர் சூறாவளி பிரசாரம் செய்து, கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி, வாக்குகள் சேகரித்து, பிரச்சார நிறைவு அறிக்கையை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோரிடம் நேரில் சமர்ப்பித்து கலந்தாய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கிறிஸ்தவர் முன்னணியின் மாநிலத் தலைவர் எம்.எல்.சுந்தரம், அறிக்கையின் சாராம்சத்தை செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும் பொழுது, தமிழகம்-புதுவையில் ஒரு கோடி கிறிஸ்தவர்கள், தங்கள் நலன் கருதாத காங்கிரஸ், பாஜக, திமுக ஆகிய கட்சிகளை புறக்கணித்து, தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவெற்றும் அதிமுகவுக்கு வழங்கி, அமோக வெற்றி அடைய செய்வது உறுதி எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 40 தொகுதிகளிலும் அமோக வெற்றியை பெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்