முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் முலாயம் சிங் யாதவ்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஏப்.23 - வரதட்சணை வழக்கில் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றபடும் என சமாஜ் வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் பேசியதால் மீண்டும் சர்சையில் சிக்கி உள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் சில தினங்களுக்கு முன்பு பேசும் போது, பாலியல் பலாத்காரத்தில் வாலிபர்கள் தவறுதலாக ஈடுபட்டு விடுகின்றனர். இதற்காக அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதா? என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் லக்னோ அருகே ஹிரோடை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு முலாயம் சிங் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தற்போது வரதட்சணை வழக்கு பொதுவாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. 

எனவே சமாஜ்வாடி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வரதட்சணை வழக்கில் பொய் புகார்  அளிப்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும் என்றார். முலாயம் சிங்கின் பேச்சால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்