முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப்பட்டுவாடா - வன்முறையைத் தடுக்கவே 144 தடை உத்தரவு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 24 - தமிழகம் மற்றும் புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று (24_ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

பணம் பட்டுவாடா மற்றும் வன்முறையை தடுப்பதற்காகவே இம்முறைத் தேர்தலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கமளித்துள்ளார்.  தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 லோக்சபா லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக நேற்று முதல் நாளை வரை மொத்தம் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் படுத்த இருப்பதாக நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், அதனை செயல் படுத்தவும் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்