முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி பலியான குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 24-காட்டு யானை தாக்கி பலியான 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி  வழங்க  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:_

22.2.2014 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே நல்லமுடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா, 5.3.2014 அன்று <ரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி உள்வட்டம், தலமலை கிராமம், தொட்ட புரத்தைச் சேர்ந்த ராச்சையா என்பவரின் மகன் ராச்சன் ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

<ரோடு மாவட்டம், அய்யம்பாளையம், பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதி அருகே கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை நால்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி சின்னாள் என்கிற ராமாத் தாள் 6.3.2014 அன்று காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.3.2014 அன்று காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானைகள் தாக்கியதில் அகால மரணமடைந்த கருப்பையா, ராச்சன் மற்றும் சின்னாள் என்கிற ராமாத்தாள் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்_அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்