முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசத்தில் மோடி அலை இல்லை: பிரதமர் மன்மோகன் சிங்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

திஸ்பூர்,ஏப்.25 - தேசத்தில் 'மோடி அலை' வீசவில்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் திஸ்பூர் அரசுப் பள்ளியில் தனது மனைவி குர்சரன் கவுருடன் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தேசத்தில் மோடி அலை வீசவில்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுவிடும் என கூறப்படுகிறது, அதற்கு சாத்தியம் இல்லை. மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரை காத்திருங்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெறும். நாட்டு மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

முன்னதாக லோகபிரியா கோபிநாத் பொர்டோலி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கனபாரா சென்றார். அங்கு, அசாம் முதல்வர் தருண் கோகோய், அசாம் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் கல்டியா ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அங்கிருந்து வாக்குச்சாவடிக்கு காரில் சென்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்