முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் அசாமில் வாக்களித்தார்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

கவுகாத்தி,ஏப்.25 - பிரதமர் மன் மோகன் சிங் நேற்றுக் காலை அசாமில் உள்ள குவஹாத்தியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அசாமில் 6 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் நேற்று காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பிரதமர் மன்மோகன்சிங், அவரது மக்களவை தொகுதியான குவஹாத்தியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் அங்கு 17 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் அசாமில் உள்ள 14 தொகுதிகளில் 8 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முன்னதாக இரண்டு கட்டமாக நடந்தது. இதில் 78% சதவீத வாக்குகள் பதிவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்