முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - பாராளுமன்ற தேர்தலையொட்டி முதல்முறையயாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

மத்திய சென்னைக்குட்பட்ட சூளை கண்ணப்பர் திடலில் மாநகராட்சி சமூகநல கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த மாதிரி வாக்குச்சாவடி திருமண மண்டபம்போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாசலில் சீரியல் பல்புகள் போடப்பட்டு இருந்தது.

தேர்தல் பணியில் <டுபட்டுள்ள 2 மாநகராட்சி பெண் ஊழியர்கள் வாசலில் மேஜை போட்டு அமர்ந்து இருந்தனர். மேஜையில் ஒரு தட்டில் கற்கண்டு, ரோஜாப்பூ, பன்னீர்செம்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சாவடியில் ஓட்டுபோட வந்த வாக்காளர்களுக்கு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

திருமண வீட்டில் வரவேற்பதுபோல ஊழியர்கள் பன்னீர் தெளித்து வாக்காளர்களை வரவேற்றனர். அவர்களுக்கு கற்கண்டு, ரோஜாப்பூ அளித்தனர்.

காலை 10.30 மணி அளவில் ஒரு இளம்ஜோடி வாக்களிக்க வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாக்களித்தபின் அவர்கள் கூறும்போது, ''நாங்கள் தற்போதுதான் முதல் முறையாக வாக்காளித்து உள்ளோம். தங்களின் முதல் ஓட்டே மாதிரி வாக்குச்சாவடியில் பதிவானது பெருமையாக உள்ளது'' என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்