முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி - ஸ்டாலின் - விஜயகாந்த் ஓட்டு போட்டார்கள்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில்  நேற்றுகாலை 10.55 மணிக்கு ஓட்டு போட்டார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் 10.10 மணிக்கு ஓட்டு போட்டார்.

இதற்காக அவர் வீட்டில் இருந்து நடந்து வந்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும் வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு சாலிகிராமத்தில் உள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் விஜயகாந்த் சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அதே சாவடியில் வாக்களித்தனர். அப்போது பாரதீய ஜனதா வேட்பாளர் இல.கணேசன் வாக்கு சாவடியை பார்வையிட அங்கு வந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்