எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஏப் 25 - மதுரை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நேற்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.
மதுரை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடியில் ஆண்களும், பெண்களும் ஓட்டுப் போடுவதற்கு ஆர்வத்துடன் வந்து நீண்ட கியூ வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். குறிப்பாக, முதன் முதலாக தங்களது வாக்குகளை பதிவு செய்ய வந்த இளைஞர்கள் தங்களது ஜனநாயக கடமையினை ஆற்ற ஆர்வத்துடன் வரிசையில் நின்று இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். ஓட்டுப்பதிவு செய்த பின்னர் அவர்கள் சிரித்த முகத்துடன் ஓட்டு சாவடியில் இருந்து வெளியே வந்தனர்.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் 1476 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை பாராளுமன்ற தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மதுரை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். கோபாலகிருஷ்ணன், திமுக வேட்பாளர் வேலுச்சாமி, தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமார், காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன், இடதுகம்யூனிஸ்டு வேட்பாளர் விக்கிரமன் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப் போடுவதற்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் 1476 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக ஆண்களும், பெண்களும் நேற்று காலை 6.30 மணிக்கே வாக்குச்சாவடிகளின் முன்பு குவிந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று பொதுமக்கள் காத்திருந்து பொறுமையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஆண்களை விட பெண்கள் ஆர்வத்துடன் வந்து காலையிலேயே ஓட்டுப் போட்டு விட்டு சென்றனர்.
மதுரை நகரில் வசந்தநகர், செல்லூர், பாக்கியநாதபுரம், மாடக்குளம், செனாய்நகர், ஊர்மெச்சிகுளம், சமயநல்லூர் உள்ளிட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. வாக்குப்பதிவையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள், தங்களது இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து வந்து ஓட்டு போட்டனர். நேற்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு காலை 11 மணி வரை 35.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மதியம் ஒரு மணியளவில் 49.33 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணியளவில் 58.02 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 65.38 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணியளவில் மதுரை பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து மொத்தத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்தனர். மதுரை கிழக்கு தொகுதியில் 72.16 சதவீத வாக்குகளும், மேலூரில் 72.78 சதவீத வாக்குகளும், மதுரை மேற்கு தொகுதியில் 64.49 சதவீத வாக்குகளும், மதுரை வடக்கு தொகுதியில் 65.16 சதவீத வாக்குகளும், மதுரை தெற்கு தொகுதியில் 67.54 சதவீத வாக்குகளும், மதுரை மத்திய தொகுதியில் 65.06 சதவீத வாக்குகளும் பதிவாகின.
வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டிருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மத்திய பாதுகாப்பு படையினரும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் அமைதியான முறையிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர் என்று மதுரை மாவட்ட கலெக்டர் எல். சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
ஒருசில வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுதானது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்குள் வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு
டோக்கன் வழங்கப்பட்டு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தத்தில் மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.