முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவுக்கு டெல்லியில் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 30 - தொலை தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி ராசாவுக்கு டெல்லியில் வாடகைக்கு வீடு எதுவும் கிடைக்கவில்லை. அலைவரிசை ஊழல் வழக்கு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீடு கிடைக்காததால் அவர் திணறலுக்கு ஆளாகி உள்ளார்.

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள் ஆவர். அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன்னாள் மந்திரிகளும், முன்னாள் எம்.பி.க்களும் வீடுகளை காலி பண்ணாமல் இழுத்தடித்து வருகிறார்கள். தொலைதொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ. ராசாவுக்கு டைப் 8 ரக மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வீட்டை உடனடியாக அவர் காலி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

தெற்கு டெல்லி பகுதியில் ஏதேனும் வீட்டை வாடகைக்கு எடுக்கலாமா என்று அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் 2 ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ.யின் கெடுபிடிக்கு ஆளாகி உள்ளார். எனவே ஆ. ராசாவுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் பிரச்சினை வரும் என்பதால் வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

மக்களவையில் தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தி.மு.க.வில் உள்பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் யாருடனாவது வீட்டை பகிர்ந்து கொள்ளவும் ஆ. ராசாவால் முடியவில்லை. திகார் சிறையில் ஆ. ராசா பல மாதங்கள் இருந்துள்ளார். மீண்டும் அவர் திகார் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அவரது அரசியல் எதிரிகள் கூறி வருகிறார்கள். 2 ஜி வழக்கை எதிர்கொள்ள டெல்லியில் வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று ஆ. ராசா கருதுகிறார். ஆனால் இதுவரை அவருக்கு வீடு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்