முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா

புதன்கிழமை, 2 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

குன்றம், ஜூலை 3 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது.

விழாவானது ஆனி மாதம் 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும். விழாவையொட்டி கோயிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் விசேஷ ஊஞ்சல் அமைக்கப்பட்டு அதில் தினமும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அங்கு ஓதுவார்கள் திருமுறை பாட சுவாமிக்கு சிறப்பு தீபதூப ஆராதனைகள் நடைபெற்றது. வரும் 10ம் தேதி வரை தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி ஊஞ்சலில் தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

விழாவின் நிறைவு நாளான 11ம் தேதி முப்பழ பூஜை நடைபெறும். அன்றைய தினம் பகல் 12 மணியளவில் உச்சிகால வேளையில் மூலஸ்தானத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கல் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி பச்சையப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்