முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு

சனிக்கிழமை, 19 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.20 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற மோசடிகள், தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராக முன்னாள் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கலாம் எனவும் யோசனை வழங்கியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டனி அரசை உலுக்கிய ஊழல்களில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலும் ஒன்று. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான சிபிஐ வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் அவ்வப்போது சிபிஐ விசாரணை அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கவும், அரசு தரப்பில் வாதாடுவதற்காக தகுதி வாய்ந்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago