முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் இருந்து திமுக - புதிய தமிழகம் வெளிநடப்பு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 22 – சட்டசபையில் நேற்று மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) ஒரு பிரச்சனை குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அது எனது ஆய்வில் உள்ளது என்றார்.

ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி கேட்டனர். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

இதே போல் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

‘‘கடைசி நேரத்தில் நீங்கள் அனுமதி கேட்டால் எப்படி என்று சபாநாயகர் வினவினார். மற்ற கட்சி உறுப்பினர்கள் முன்பே எழுதி கொடுத்து அனுமதி கேட்டு இருந்தனர். நீங்கள் கடைசி நேரத்தில் தந்ததால் இப்போது பேச வாய்ப்பு இல்லை’’ என்றார்.

இதை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்