முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹேமமாலினியை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

ஸக்னோ, ஜூலை.23 - நடிகை ஹேமமாலினி உத்தர பிரதேச மாநில மதுரா தொகுதியில் இருந்து பா.ஜ சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஹேமமாலினி மும்பையில் வசிக்கிறார், எம்.பி. என்ற முறையில் டெல்லியில் அவருக்கு அரசு வீடு உள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஹேமமாலினி தொகுதியை கண்டு கொள்ளவில்லை என்று மதுரா மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜூன் மாதம் 2-வது மாரத்தில் அவர் மதுரா வந்ததுடன் சரி, அதுவும் ஒருநாள் மட்டுமே மக்களை சந்தித்தார். அதன் பிறகு அவரை பார்க்க முடியவில்லை என்று தொகுதி மக்கள் புகார் கூறினார்கள்.

உள்ளூர் பா.ஜ.வினர் கூட எம்.பி. என்ற முறையில் ஹேமமாலினியை சந்திக்க முடியவில்லை. என்று குறைபட்டுக் கொண்டனர். இதனால் ஆவோசம் அடைந்த மக்கள், எங்கள் எம்.பி.யை காணவில்லை என்று ஹேமமாலினி படத்தைப் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி அவரது உருவகபொம்மை எரித்தனர்.

இது பற்றி மதுரா கோவில் அர்ச்சகர் கூறுகையில், ஹேமமாலினி பா.ஜ.வின் மூத்த தலைவராக இருக்கிறார். பெரும்பாலும் டெல்லியிலேயே இருக்கிறார். அவருக்கு மதுரா வருவது ஒன்றும் பெரிய துரம் இல்லை. அவர் தொகுதி மக்களை சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்