எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - தமிழக சட்டசபையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அத்துறைக்கான மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்தார். அப்போது அவர் அறிவித்ததாவது:_
1.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கம் செயல்படுத்துதல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட ஒரு பள்ளிக்கு ரூ.55,000/- வீதம், 207 பள்ளிகளுக்கு ரூ.113.85 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
2.ஆதி திராவிடர் நல பள்ளிகளை பராமரிக்கும் பொருட்டு ரூ.10,000/- செலவினத் தொகை வழங்குதல்
1096 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10000/- வீதம் ரூ.109.60 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்
3.மலைப் பகுதிகளில் இயங்கி வரும் பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ / மாணவியருக்கு (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) சூரிய எரிசக்தியுடன் கூடிய விளக்கு வழங்குதல்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வரும் 13154 மாணவ / மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ஒரு சூரிய எரிசக்தியுடன் கூடிய விளக்கு ரூ.550/- மதிப்பில் ரூ.73.00 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
4.பள்ளி மாணவ / மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்து செல்லுதல்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ / மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம், 207 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.51.75 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
5. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல்:
தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் பொறியியல் கல்லுhரிகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள் ஐ.ஐ.டி. போன்ற மைய கல்வி நிறுவனங்களில் போன்ற மேற்படிப்பு படிக்க பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல் பட்டதாரிகளை தேர்வுசெய்து, தகுதியின் அடிப்படையில் மேற்படி தேர்வு எழுதுவதற்கான ஆயத்த பயிற்சி அளிக்க ஒரு மாணவருக்கு ரூ.50,000 வீதம் ரூ.50.00 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
6. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கும் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும் முதலுதவிப் பெட்டி வழங்குதல்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு சிறு சிறு விபத்துக்கள் நேரிடும் போது அவர்களுக்கு முதலுதவி அளித்திடும் பொருட்டு 1346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவிப் பெட்டி ரூ.3400 மதிப்பில் மொத்தம் ரூ.49.16 இலட்சம் செலவில் வழங்கப்படும். ஆதிந.7
7.ஆதிதிராவிடர் நலஉயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுகாதார குட்டை தகளி வழங்குதல்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75 மேல்நிலைப்பள்ளிகளில் 32,112 மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவியரின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு சுகாதார குட்டை தகளி ரூ.25,000/- மதிப்பில் 185 ஆதி திராவிட நல பள்ளிகளுக்கு ரூ.46.25 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
8.குன்னுhர் மற்றும் கூடலுhர் கோட்டங்களில் சிறப்பு தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல்
நீலகிரி மாவட்டத்தில் 32,813 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரான உதகமண்டலத்திலிருந்து கூடலுhர் மற்றும் குன்னுhர் பகுதிகள் 40 கி.மீ. தொலைவில் உள்ளதால் அரசின் நலத்திட்டங்கள் பழங்குடியின மக்களை எளிதில் சென்றடைய குன்னுhர் மற்றும் கூடலுhர் பகுதிகளுக்கு தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுத்த ஆண்டொன்றுக்கு ரூ.40.00 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
9.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 207 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்திய பின்னர், மாநில அளவில் போட்டிகள் நடத்தி சான்றிதழுடன் பரிசுகள் வழங்க ரூ.26.00 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும். ஆதிந.7
10.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு யோகா வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1397 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கு முதற்கட்டமாக 100 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 107 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் வாயிலாக யோகா பயிற்சி ரூ.16.80 இலட்சம் செலவினத்தில் அளிக்கப்படும்.
11.மனித நேய வாரவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான தொகையினை உயர்த்துதல்
தீண்டாமையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் அனைத்து மாவட்டங்களில் மனித நேய வாரவிழா விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.15,000/- லிருந்து ரூ.50,000/- வீதம் உயர்த்தியும் மற்றும் மாநில அளவில் விழாவினை நடத்துவதற்கு ரூ.65,000 லிருந்து ரூ.1.00 இலட்சமாக உயர்த்தியும் வழங்கப்படும்.
12.சமபந்தி போஜனத் தொகையினை உயர்த்துதல்
தீண்டாமையை ஒழிப்பதற்காகவும், மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும், மாவட்டங்களில் நடைபெற்று வரும் சமபந்தி விருந்தினை சிறப்பாக நடத்திடும் வகையில் ஒரு மாவட்டத்திற்கு 1000 நபர்களுக்கு உணவளிக்க மாநில அரசின் பங்காக வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.2500/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தியும் மற்றும் இத்திட்டத்தினை 31 மாவட்டங்களிலும் (சென்னை மாவட்டம் தவிர) செயல்படுத்திட ரூ.1.55 இலட்சத்தில் இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
13.இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மற்றும் மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி1) முதனிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின மாணவர்களின் பயிற்சி வகுப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்.
மைய அரசின் இந்திய குடிமைப்பணிகள் மற்றும் மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி-1) முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின தேர்வர்களுக்கு முதன்மைத்தேர்வினை எழுத ஆகும் இடைநிகழ் செலவினை மேற்கொள்ள ஏதுவாக ஒரு தேர்வருக்கு ரூ.50,000/- மைய அரசின் பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கான சிறப்பு நிதியிலிருந்து வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.