முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணியில் 12 நாள் திருவிழா: ஆக.,-28-ல் தொடக்கம்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நாகை, ஜூலை.24 - நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வரும் ஆகஸ்ட் 28முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் முனுசாமி பேசிதாவது, பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகளை 50 இடங்களில் வைக்க வேண்டும். தேவையான இடங்களில் தற்காலிக கழிவறைகளை அமைக்க வேண்டும். நகர் முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 50 டாக்டர்கள், 50 செவிலியர்கள் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு சுழற்சி முறையில் செயல்பட வேண்டும். விழா நாட்களில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்