முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோயிலுக்கு தடையற்ற மின்விநியோகம்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை 24 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு 24 மணி நேர தடையற்ற மின்சார விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

திருக்கோயிலுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சுப்பிரமணியபுரம், மகாளிபட்டி, ஆரப்பாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து நேரடியாக எச்.டி. மின் விநியோகம் இருந்தது. தற்போது 4வது வழியாக திருக்கோயில் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து நேரடியாக எச்.டி மின்விநியோகத்துக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய வழியில் மின்சார விநியோகம் முறைப்படி தொடங்கியுள்ளது. புதிய மின்சார பாதை விநியோக தொடக்கத்துக்காக சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். இதில் கோயில் அலுவலர்கள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்