முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

+2 மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணிணி: வைகோ கோரிக்கை

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 24 - தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், அரசின் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணிணி வழங்கப்படுகிறது. இதில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் பிரிவு, சுயநிதி பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படவில்லை என திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் இலவச மடிக்கணிணி கிடைக்காத மாணவர்கள் மாவட்ட கலெக்டரிடம் முறையிட அவரது அலுவலகம் சென்றுள்ளனர். ஆனால் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களின் மனம் புண்படும்படி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். போலீசாரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச மடிக்கணிணி வழங்க அரசு முன்வர வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்