முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர தேர்தல்: கூடுதல் இடம்கேட்டு சிவசேனாவுக்கு நெருக்கடி

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை 24 - மகராஷ்டிராவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என சிவசேனா கட்சிக்கு பாஜ கோரிக்கை விடுத்துள்ளது.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனா இடம் பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த மாநில சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் இதற்கு முன்பு பாஜகவுக்கு 119 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிவசேனா 169 இடங்களில் போட்டியிட்டு வந்தது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு கூடுதலாக 15 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தற்போது பாஜ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மதிக்காவிட்டால் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் என மாநில பாஜ தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது சிவசேனா கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்