முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் சைக்கிள் குண்டு வெடித்து ஒருவர் பலி

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஜூலை 24 - அசாமில் போலீஸ் நிலையம் எதிரில் குண்டு வெடித்து ஒருவர் பலியானார்.

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் கிரிஷானி என்ற இடத்தில் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை 8.10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு அங்கு நின்றிருந்த ஒரு சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஒருவர் பலியானார். அவர் பெயர் முஜிபுர் ரஹ்மான். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். சைக்கிளில் குண்டு வைத்து அதை போலீஸ் நிலையம் முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். பலியானவர்தான் குண்டு வைத்தவரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்