முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைகிறது

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 24 - பாராளுமன்ற கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைகிறது.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்கள் நடைபெறுவதால் ஒரு வாரத்துக்கு முன்பே பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைகிறது.

அதற்குள் துணை சபாநாயகர் பொது கணக்கு குழு, நிதி, ரயில்வே, மனிதவள மேம்பாடு போன்ற முக்கிய துறைகளுக்கான குழுக்கள் அறிவிக்கப்படவிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் இல்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்துள்ளார். காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் உள்ள அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 2 முன்வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக காங்கிரசை சேர்ந்த கே.வி. தாமஸ் நியமிக்கப்படுகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொதுக்கணக்கு குழு தலைவர் பதவி பாஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் ரயில்வே குழு தலைவர் பதவிக்கு குறி வைத்தது. ஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்