எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 24 – உலக வங்கி தலைவர் டாக்டர் ஜிம் யங் கிம் மற்றும் அவரது குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டப்பணிகளை பார்வையிட்டனர். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் வாழ்வாதார முயற்சிகளுக்கு முன் உதாரணம் முதல்வர் ஜெயலலிதா என்று அவர்கள் மனம் திறந்து பாராட்டினார்.
காஞ்சிபுரம் படப்பை ஊராட்சியில் உள்ள மக்கள் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழில் குழு உறுப்பினர்களுடன் உலக வங்கி தலைவர் மற்றும் குழுவினர் கலந்துரையாடினர்.
புதுவாழ்வு திட்டம் மூலம் நிதி உதவி, திறன் வளர்ப்பு ஆகிய பயன்கள் பெற்று மக்கள் தமது வாழ்வில் முன்னேறி உள்ளதையும், தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சி இம்முன்னேற்றத்திற்கு அடிகோலியது என்பதையும் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் செயல்பாடுகள், அமைப்புகளின் இணையதள தகவல் மேலாண்மை ஆகியவை பெண்களின் முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளது என்றும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது டாக்டர். ஜிம் யங் கிம் மற்றும் உலக வங்கி இயக்குநர் ஒனோ ரூல், உலக வங்கியின் இந்திய இயக்குநர் சொஜ டிவீயஸ், பன்னாட்டு நிதிக் கழக பிரிவு மேலாளர் சோபா செட்டி, ஊரக மற்றும் வாழ் வாதாரம் (தெற்காசிய பகுதி) முதுநிலை ஊரக வளர்ச்சி வல்லுநர் சமிக் தாஸ், ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் இளைஞர் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு செயல்பாடுகளை, கண்டறிய இந்தியாவில் செயல்பட்டு வரும் டிரயம்ப் பன்னாட்டு (ஆயத்த உள்ளாடை தயாரிப்பு) நிறுவனத்திற்கு வந்தனர். அங்கு பணிபுரிந்து வரும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த புதுவாழ்வு திட்ட இளைஞர்களிடம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்கள் பற்றியும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றியும் அவர்கள் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் சீரிய செயல்பாடுகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.
இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 1,200 பணியாளர்களில் 674 இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். புதுவாழ்வு திட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் வாழ்வாதார முயற்சிகளுக்கு ஓர் முன்னுதாரணம் என்றும் பாராட்டினர். இதில் 10 பணியாளர்கள் மாற்றுதிறனாளிகள் என்பதை கண்டு வியந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது, நிதி செயலாளர் உதயச்சந்திரன், புதுவாழ்வு திட்ட இயக்குநர் மைதிலி க. ராஜேந்திரன், பொருளாதார விவகாரங்கள் துறை துணை செயலாளர் பிரிஜேஷ் பாண்டே, மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், கூடுதல் திட்ட இயக்குநர் சஜீவனா, வாழ்வாதார சிறப்பு வல்லுநர் சக்கரபாணி மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக அரசின் புது வாழ்வு திட்டம் உலக வங்கியின் நிதி உதவியோடு வறுமையை ஒழித்து மக்களை ஆற்றல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 120 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் 4174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.1667 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் தமிழகத்தில் மாற்று திறனாளிகள், பழங்குடியினர் நலிவுற்றோர் உள்ளிட்ட 9 லட்சத்து 60 ஆயிரம் ஏழை குடும்பங்களை
பயனடைய செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.