முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்துதல் நிறுத்தம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 25 - இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை ஜூலை 25,26 தேதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. சில தொழில்நுட்ப மேம்பாடு நடவடிக்கைகள் காரணமாக இந்த இணையதள செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் இணையதளம் மூலம் வழங்கப்படும் சேவைகள் ஜூலை 25ம் தேதி மாலை 4 மணி முதல் ஜூலை 26ம் தேதி மாலை 6 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை, மின் கட்டண நிலையை அறிதல், மின்னஞ்சல் சேவை, ஒப்பந்தப்புள்ளி தொடர்பான சேவைகள் வழங்கப்படாது. இருப்பினும் நுகர்வோர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் வழக்கம் போல் தங்களது மின் கட்டணங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்