முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் கல்வி திட்டம்: தமிழகத்துக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 25 - தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராட்டு தெரிவித்தார்.

மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது தென்சென்னை தொகுதி அதிமுக உறுப்பினர் ஜெயவர்த்தன் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் புதிய பள்ளிகள், குடிநீர் வசதி அளித்தல் போன்றவை உறுதிப்படுத்தப்படுகின்றன. ஆனால் மாநிலங்களுக்கு அளிக்கும் நிதியை குறைத்து விட்டு இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த முடியும். இருப்பினும் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது என்றார். அதை தொடர்ந்து ஸ்மிருதி இராணி அளித்த பதிலில், இந்தியாவிலேயே கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அனைவருக்கும் கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அங்கீகரிக்கிறது. இதற்காக தமிழக, கேரள அரசுகளுக்கு மத்திய அரசு நன்றி தெரிவித்து கொள்கிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்