முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லுவுடன் கூட்டணி பற்றி பேசவில்லை: நிதீஷ் குமார்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை 25 - பீகாரில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியின் தலைவர் நிதீஷ்குமார், மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பீகாரில் 10 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு லல்லு, நிதீஷ் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யூகங்கள் வெளியாயின. லல்லுவை சந்திக்க நிதீஷ்குமார் டெல்லி செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கூட்டணி குறித்து லல்லுவுடன் இதுவரை பேச்சு நடத்தவில்லை என்று நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜவுக்கு எதிரான கட்சிகள் ஒரு அணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணிக்காக ஐக்கிய ஜனதா தளம் அலையவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்